ஆப்நகரம்

டெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரையைச் சேர்ந்த, அரசு மருத்துவர் உயிரிழப்பு...

Samayam Tamil 14 Nov 2019, 9:34 am
டெங்குகாய்ச்சலால் தொடர்கிறது சோகம். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து, டெங்குகாய்ச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பால், உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதிகம்பேர் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் கூறுகிறது.
Samayam Tamil WhatsApp Image 2019-11-14 at 9.25.25 AM


டெங்கு பாதிப்பில் பலர் சிக்கி உயிரிழந்து வரும் இந்த சூழலில் மதுரையில், அரசு மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மதுரை, பழைய நத்தம் சாலையைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை அரசனூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கோவை: ரயில் மோதி நான்கு மாணவர்கள் பலி!

இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிருந்தா சமீப நாட்களாகச் சோர்வாகக் காணப்பட்டுள்ளார். இதையடுத்து, பிருந்தா நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்றுவந்த பிருந்தா நேற்று மாலை சிகிச்சை உதவாமல் உயிரிழந்தார். பிருந்தாவின் கணவர் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், பிருந்தா இறப்பதுக்கு முன் மதுரை மருத்துவமனையில் ஜியாசினி என்ற 11 வயது சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மக்களை பயத்தில் உலவவிட்ட ‘அரிசி ராஜா’ பிடிபட்டான்!

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுன் குமார் அளித்த பேட்டியில், “மதுரையில் டெங்குவால் இதுவரை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி