ஆப்நகரம்

காவலர்களே ரிலாக்ஸ் பிளீஸ்... தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளோம். அதற்கு முன்னதாக குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

Samayam Tamil 14 Jan 2020, 5:32 pm
இன்றளவும் சினிமாத் துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் நிலைத்து வருபவர் ரஜினிகாந்த். உங்கள் ரஜனி -ஆம். ரஜனிதான் - என்ற இடத்திலிருந்து சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு மக்கள் அபிமானத்தை தாறுமாறாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்தார் ரஜினி.
Samayam Tamil policemen


ரஜினியின் அரசியல் கண்ணாமூச்சிகளுக்கு இடையில், தர்பார் திரைப்படம் வெற்றிகரமாக வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினி.

இந்நிலையில் , சிவகங்கை மாவட்ட காவல்துறையின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சலுகை விலை டிக்கெட்டில் காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் 'தர்பார்' திரைப்படம் பார்க்க மாவட்ட எஸ்.பி.ரோகித் நாதன் சிறப்பு ஏற்பாடு செய்தார்.

சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல்நிலையம் மற்றும் சிவகங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் மானாமதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை 10 மணிக்கு 'தர்பார்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளோம். அதற்கு முன்னதாக குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தத் திரைப்படம் போலீஸ் அதிகாரி பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்த எஸ்பிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி