ஆப்நகரம்

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய வழக்கில் அமமுக பிரமுகர் கைது

சிவகங்கை: பிறந்தநாள் அன்று பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய அமமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 17 May 2019, 3:37 pm
சிவகங்கையை சேர்ந்த அமமுக பிரமுகரான பையா கார்த்திக் (28) தனது பிறந்தநாளுக்கு பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடியதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
Samayam Tamil சிவகங்கையில் அமமுக பிரமுகர் திடீர் கைது
சிவகங்கையில் அமமுக பிரமுகர் திடீர் கைது


திருப்புத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி கடந்த வாரம் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.

அப்போது கேக் வெட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கேக் எடுத்துவரப்பட்ட நிலையில், அதை தன்னிடமிருந்த பட்டாக்கத்தியில் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கார்த்திக்கின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இந்த விவகாரம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிவங்கை மாவட்ட எஸ்.பி ஜெயசந்திரன் வெளியிட்ட உத்தரவின் பேரில் கண்டவராயன்பட்டி போலீசார் கார்த்திக் உள்பட அவரது நண்பர்கள் 5 பேரை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்தி மீது ஏற்கனவே திருகோஷ்டியூர், கண்டவராயன்பட்டி, திருப்புத்தூர் காவல்நிலையங்களில் மணல் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கார்த்திக் மற்றும அவருடைய கூட்டாளிகளிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி