ஆப்நகரம்

நாட்டரசன் கோட்டை: வயலில் பாடம் படிக்கும் மாணவ, மாணவிகள்!

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடும் பயிற்சியளிக்கப்பட்டது.

Samayam Tamil 10 Oct 2019, 9:36 am
இந்தியா ஒரு விவசாய நாடு என பள்ளிகளில் பாடம் நடத்தினாலும், இன்று அரசு கண்டுகொள்ளாத துறையாக விவசாயத் துறை மாறிவிட்டது. பருவ மழை பொய்ப்பதுடன், பெரு நிறுவனங்கள் விவசாய நிலங்களை குறிவைத்து பறிக்கும் போக்கும் நடைபெறுகிறது. விவசாயிகள் தற்கொலைப் பட்டியலும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
Samayam Tamil Untitled collage (1)


ஹைட்ரோகார்பன் கிணறுகளால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்- ராமதாஸ் கொந்தளிப்பு!

கிராமப் பொருளாதாரம் செழிப்பாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் வளரும் தலைமுறைக்கு விவசாயம் குறித்த புரிதலை ஏற்படுத்த சில பள்ளிகளும் ஆசிரியர்களும் மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி தங்களது மாணவ, மாணவியர்களை விவாசய நிலத்துக்கு அழைத்துச் சென்று நாற்று நட கற்றுக்கொடுத்துள்ளனர்.

நெல் விதைப்பு, வளர்ப்பு, அறுவடை வரை விவசாயிகள் மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை கூறினர். பின்னர் நிலத்தில் மாணவ மாணவிகள் விவசாயிகளுடன் சேர்ந்து குலவையிட்டு நாற்று நட்டனர்.

TN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை!

வழக்கமாக பள்ளிகள் அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இன்றைய காலத்தில் அனைத்திற்கும் முதலான விவசாயம் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள முயற்சியெடுத்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி