ஆப்நகரம்

வெளுத்து வாங்கும் கனமழை; 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தொடரும் கனமழையால், 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNN 2 Nov 2017, 7:19 am
சென்னை: தொடரும் கனமழையால், 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil six districts announced holiday due to heavy rain
வெளுத்து வாங்கும் கனமழை; 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஏராளமான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.

நீர் நிலைகள் நிரம்பி அருகிலுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. மழை பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதியும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும். இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.

Six districts announced holiday due to heavy rain.

அடுத்த செய்தி