தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஒரு பக்கம் கோர தாண்டவம் ஆடுகிறது என்றால் கோடை வெயிலும் மக்களை வாட்டி எடுக்கிறது. ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் மக்கள் அக்னி நட்சத்திர வெக்கையில் தவிக்கின்றனர்.
வெப்பத்தைப் போக்க ஒரு மழை பெய்யாதா என சன்னல் கம்பிகள் வழியாக வானத்தைப் பார்த்திருக்கிறார்கள் மக்கள். அவ்வப்போது பெய்யும் கோடை மழையும் கோடு போட்டது போல் தென் மாவட்டத்தை தாண்டமாட்டேன் என்கிறது. இதனால் மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் வெப்பத்தை போக்க என்ன வழி என திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குளிர்ச்சியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி என ஆறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கேற்றாற்போல் காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துவிழும் நிலையில் உள்ளது. சென்னையின் மண்ணில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் குளிர்ச்சியை பரவவிட்டுள்ளது இன்றைய வானிலை.
தமிழகத்தில் கொரோனா ஒரு பக்கம் கோர தாண்டவம் ஆடுகிறது என்றால் கோடை வெயிலும் மக்களை வாட்டி எடுக்கிறது. ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் மக்கள் அக்னி நட்சத்திர வெக்கையில் தவிக்கின்றனர்.
வெப்பத்தைப் போக்க ஒரு மழை பெய்யாதா என சன்னல் கம்பிகள் வழியாக வானத்தைப் பார்த்திருக்கிறார்கள் மக்கள். அவ்வப்போது பெய்யும் கோடை மழையும் கோடு போட்டது போல் தென் மாவட்டத்தை தாண்டமாட்டேன் என்கிறது. இதனால் மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் வெப்பத்தை போக்க என்ன வழி என திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குளிர்ச்சியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி என ஆறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கேற்றாற்போல் காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துவிழும் நிலையில் உள்ளது. சென்னையின் மண்ணில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் குளிர்ச்சியை பரவவிட்டுள்ளது இன்றைய வானிலை.