வேலூர்: கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே காரில் பயணம் செய்த ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
வாலாஜா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே காரில் பயணம் செய்த ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையில் மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தங்களின் உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய சென்னையைச் சேர்ந்த ஷாதிக் அலி (40 வயது), மனைவி பர்வீன் (35), ஷாதிக்த்தின் தந்தை அன்வருதின் (70), தாய் ஆலமா (65) ஆகியோர் காரில் திரும்பியுள்ளனர்.
அப்போது பெட்ரோல் பங்க் அருகே ஓரமாக நிறுத்த சென்ற கண்டெய்னர் லாரி மீது இவர்கள் வந்த கார் மோதியது. இதில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாலாஜா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே காரில் பயணம் செய்த ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையில் மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தங்களின் உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய சென்னையைச் சேர்ந்த ஷாதிக் அலி (40 வயது), மனைவி பர்வீன் (35), ஷாதிக்த்தின் தந்தை அன்வருதின் (70), தாய் ஆலமா (65) ஆகியோர் காரில் திரும்பியுள்ளனர்.
அப்போது பெட்ரோல் பங்க் அருகே ஓரமாக நிறுத்த சென்ற கண்டெய்னர் லாரி மீது இவர்கள் வந்த கார் மோதியது. இதில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.