ஆப்நகரம்

பீலா ராஜேஷ்க்கு எந்த துறை? பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்!

தமிழ்நாட்டில் இன்று ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 26 May 2021, 2:57 pm
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil Beela rajesh


முதல்வருக்கான தனிச் செயலாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகிய அதிகாரிகள் முதலில் நியமிக்கப்பட்ட நிலையில் காவல் துறையிலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளும் பலர் மாற்றப்பட்டனர். தற்போது துறை ரீதியாகவும் செயலாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நேற்று (மே 25) 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று (மே 26) மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு? முதல்வர் எடுத்த முடிவு இதுதான்!
* நேற்று காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

* சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறையில் முதன்மை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
ரேஷன் அட்டைகளுக்கு மீண்டும் 2000: இதை மட்டும் செஞ்சா போதும்!
* சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி