ஆப்நகரம்

மாஸ்க் அணியாவிட்டால் 6 மாத சிறை ..! அமலுக்கு வந்தது அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுளார்.

Samayam Tamil 11 Mar 2021, 6:03 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாம் கட்ட அலையை எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தளர்வுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. அதுபோல தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை மீண்டும் அமலாகியுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil file pic


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் நீலகிரி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், மாஸ்க் அணிய வேண்டும், பொது இடத்தில எச்சில் துப்பக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விதித்து வருகிறார். மேலும், நீலகிரி சுற்றுலா மாவட்டம் என்பதால் கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்குவதால் வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


முதல்வர் மாவட்டத்தில் சலசலப்பு; சீட் மறுக்கப்பட்டதால் கொந்தளித்த முன்னாள் அமைச்சர்!

அதன்படி இன்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் உப்பட்டியில், வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவ இயந்திரம் மற்றும் வி.வி.பேட் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து நடைபெற்ற செயல்முறை விளக்கத்தினை கேட்டறிந்தவர், தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

அடுத்த செய்தி