ஆப்நகரம்

ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கா? வானிலை நிலவரம் என்ன சொல்கிறது!

தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் அளவு எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 2 Aug 2019, 2:15 pm
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் மழையைத் தரவில்லை. ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் தமிழகத்திற்கு, இது பெரும் வேதனையை அளித்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
Samayam Tamil Dry Lands


சென்னை ரயின்ஸ் என்ற தனியார் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மந்தமான வானிலை சூழலே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடப்பாண்டு பருவ மழை பொய்த்துவிட்டது. தற்போது வரை கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டுமே தென்மேற்குப் பருவமழை தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

Also Read: ’சிங்கம் போட்டால் சிங்கக்குட்டி, வேறொன்று குட்டி போட்டால்...?’- செந்தில்போல டவுட் கேட்ட ராஜேந்திர பாலாஜி

ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிர பகுதிகளில் நகரக்கூடும். எனவே தமிழகத்தில் பெரிதாக மழை ஏதும் இருக்காது.

இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை காலை வரை, நாட்டின் தென் பகுதிகளில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்காது என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு தென்னிந்திய பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஆசிரியர்கள் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது!

வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் நாட்களில் சராசரி மழைப்பொழிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு பற்றாக்குறையாகவோ அல்லது சராசரிக்கு மிக அருகிலோ தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

கடலோர தமிழகம், ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: தேர்தல் விதிமுறைகளை மீறிய மு.க.ஸ்டாலின் - சீல் வைக்கப்பட்ட மண்டபம் நீதிமன்றத்தில் முறையீடு!

அடுத்த செய்தி