ஆப்நகரம்

அதிவேகத்தில் சென்ற வாகனம் மோதி வனப்பகுதியில் கரடி உயிரிழப்பு

திருநெல்வேலி காட்டுப் பகுதியில் அதிவேகமாக சென்ற வாகனத்தின் மீது மோதி, படுகாயங்கள் ஏற்பட்டு கரடி ஒன்று உயிரிழந்ததை குறித்து வன அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 30 Apr 2019, 11:00 pm
நாங்குநேரி கன்னியாகுமரியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் படுகாயங்கள் அடைந்த நிலையில் கரடி ஒன்று உயிரிழிந்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்.
Samayam Tamil வாகனம் மோதி கரடி உயிரிழப்பு
வாகனம் மோதி கரடி உயிரிழப்பு


உடலை கைப்பற்றிய அதிகாரிகள் உடற்கூறு ஆய்வுக்காக விலங்கு நல மருத்துவரிடம் ஒப்படைத்தனர். அப்போது நடத்தப்பட்ட உடற் கூறு சோதனையில், உயிரிழந்த கரடிக்கு மூன்று வயது என்பது தெரியவந்தது.

மேலும், அதிவேகத்தில் சென்ற வாகனம் கரடியின் நெஞ்சுப் பகுதியில் மோதியுள்ளது. இதனால் கரடி உயிரிழிந்தது தெரியவந்தது. வாகனம் மோதியதால் நிலைகுலைந்த கரடி சிறுதி தூரம் சென்று பிறகு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள மாவட்ட வன அதிகாரி கே. திருமாள், அந்த பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் வன காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி