ஆப்நகரம்

படிப்படியாக மழை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேயில் 2 நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் எனவும், படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.

Samayam Tamil 30 Oct 2018, 2:03 pm
தமிழகம் மற்றும் புதுச்சேயில் 2 நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் எனவும்,படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil dc-Cover-5pnpa6c1qid2odnam2eu0i2d26-20180709015345.Medi.


இன்று அதிகாலையில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், புழல், செங்குன்றம், ரெட்டேரி,மாதவரம்,சோழவரம், பொன்னேரியிலும் மழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியாதாவது :

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களில்வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும்.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.வங்க கடலில்நிலவும் வளி மண்டலம் மேலடுக்கு வலுப்பெற்று வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும் .

வாங்கக் கடலில்மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் கடலில் காற்று 35 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி