ஆப்நகரம்

இறந்த குட்டிக்கு அருகே நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் தாய் யானை..!

நீலகிரி அருகே சேற்றில் சிக்கி இறந்துபோன தனது குட்டிக்கு அருகே 6 நாட்களாக காத்துக்கிடக்கும் தாய் யானை.

Samayam Tamil 22 Feb 2020, 4:55 pm
நீலகிரி மாவட்டம் அருகே கூடலூர் அருகே ஒரு வாரத்துக்கு முன்பு சேற்றில் சிக்கி இறந்துபோன தனது குட்டிக்கு அருகே 6 நாட்களாக தாய் யானை முகாமிட்டுள்ளது.
Samayam Tamil small elephant killed in mud near nilgiris gudalur
இறந்த குட்டிக்கு அருகே நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் தாய் யானை..!


தாய் யானைக்கு உணவு

6 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் சோர்வாக கிடக்கும் தாய் யானைக்கு வனத்துறையினர் அவ்வப்போது பழங்களை சற்று தொலைவில் வைத்து விட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் கவலை

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் இறந்த குட்டியை அப்புறப்படுத்த முயற்சித்தும் தாய் யானையின் ஆக்ரோஷத்தால் கிட்ட கூட நெருங்கமுடியாமல் தவிக்கின்றனர்.

சேற்றில் சிக்கி குட்டி யானை இறந்தது

குட்டி இறந்ததை அடுத்து மற்ற யானைகள் அங்கிருந்து சென்ற போதும், தாய் யானை மட்டும் 5 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடி சம்பவ இடத்திலேயே முகாமிட்டுள்ளது.

6 நாட்களாக காத்துக்கிடக்கும் தாய் யானை

சம்பவத்தன்று யானை கூட்டம் தண்ணீர் அருந்துவதற்காக வந்துள்ளன. அப்போது ஒரு வயதான குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கியுள்ளது. அதை மீட்க மற்ற யானைகள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை.

அடுத்த செய்தி