ஆப்நகரம்

அடுத்த மாதம் முதல் சின்னமலை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை: ஓ.பன்னீர்செல்வம்

அடுத்த மாதம் முதல் சின்னமலை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

TNN 2 Sep 2016, 1:45 pm
சென்னை: அடுத்த மாதம் முதல் சின்னமலை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Samayam Tamil small mount airport metro service starts from next month says o panneer selvam
அடுத்த மாதம் முதல் சின்னமலை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை: ஓ.பன்னீர்செல்வம்


தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 மானியக் கோரிக்கைகளை அத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன் மீது பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசினார்.

அப்போது குரோம்பேட்டை- ராதா நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிலுவையில் உள்ளதாகவும், அங்கு 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வழக்குகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறினார். மு.க.ஸ்டாலினால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் வரை நீட்டித்து தரவேண்டும் என்றும், வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை கீழ்க்கட்டளை வழியாக தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பொழிச்சலூரில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணிகள் சேவையை கடந்த ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததாக தெரிவித்தார். சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதாக கூறினார். அடுத்த மாதம் இது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் நிலத்தடி சுரங்கப்பணிகள் அடுத்த ஆண்டு முழுமை அடையும் என்றும், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் அடிக்கல் நாட்டியதாகவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பணிகள் நடந்து வருவதாகவும், அதில் இரண்டாம் திட்டப் பணிகளுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அடுத்த செய்தி