ஆப்நகரம்

சென்னையில் பட்டாசு புகை மூட்டம்: பொதுமக்கள் அவதி!

தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

TNN 19 Oct 2017, 12:00 am
சென்னை: தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil smoke fog all around the chennai city due to the diwali celebrations
சென்னையில் பட்டாசு புகை மூட்டம்: பொதுமக்கள் அவதி!


தீபாவளி நாளான இன்று அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால், காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்றுமாசுபாட்டின் அளவாகும். ஆனால், இன்று இது 263 என்ற அளவில் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டு வருவதால், சென்னை முழுவதும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் சுவாசிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் புகைமூட்டம் நிலவுவதால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Smoke fog all around the Chennai city due to the Diwali celebrations.

அடுத்த செய்தி