ஆப்நகரம்

யார் யாரோ வர்றாங்க! போறாங்க! நானும் வருவேன் என்று தலைமை செயலகத்துக்குள் நுழைந்த பாம்பு!

தமிழக தலைமை செயலகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 18 Jun 2017, 12:23 pm
தமிழக தலைமை செயலகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil snake was caught by fire fighters in tamilnadu secretariat building
யார் யாரோ வர்றாங்க! போறாங்க! நானும் வருவேன் என்று தலைமை செயலகத்துக்குள் நுழைந்த பாம்பு!


தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. முதல் நாளின் போது, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ குறித்து பேச அனுமதி அளிக்கும்படி திமுக கோரிக்கை விடுத்தது. அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்க சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர் அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 2ம் நாளான நேற்றும் ஸ்டாலின் வீடியோ குறித்து மு.க.ஸ்டாலின் பேச சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் தலைமை செயலகத்திற்குள் பாம்பு ஒன்று கம்பீரமாக நுழைந்துள்ளது. அப்போது பாம்பு ஒன்று உள்ளே செல்வதை பார்த்த பாதுகாப்பு போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தெரியப்படுத்தினர்.

இதன் காரணமாக தலைமை செயலகத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைமை செயலக செய்தியாளர் அறைக்கு அருகிலுள்ள நூலக அறைக்குள் பாம்பு சென்றது. தீவிர வேட்டையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு நூலக அறையில் பதுங்கியிருந்ததை அப்படியே பிடித்தனர்.

தலைமை செயலகத்திற்குள் யார் யாரோ வர்றாங்க! போறாங்க! நானும் வருவேன் வந்து வந்து காட்டிய பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாம்பு வந்தது நல்ல சகுணமா, இல்லை கெட்ட சகுணமா என்ற யோசனையில் அதிமுகவின் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி