தமிழகத்தில், என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பங்களை இதுவரை 2,52,781 பேர் வாங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக, பதிவு செய்தவர்கள் ஆவர். கடந்த 15ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்கியது. ஆன்லைன் மூலமாக, இதற்கெனப் பதிவு செய்த பிறகே, விண்ணப்பம் வழங்கப்படும்.
இதன்படி, விண்ணப்ப விநியோகம் தொடங்கியது முதலாக, இதுவரை 2,52,781 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 1,84,530 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, ஜூன் 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக, பதிவு செய்தவர்கள் ஆவர். கடந்த 15ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்கியது. ஆன்லைன் மூலமாக, இதற்கெனப் பதிவு செய்த பிறகே, விண்ணப்பம் வழங்கப்படும்.
இதன்படி, விண்ணப்ப விநியோகம் தொடங்கியது முதலாக, இதுவரை 2,52,781 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 1,84,530 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, ஜூன் 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.