ஆப்நகரம்

பெங்களூருவில் இருந்து சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறினர்!

பெங்களூருவில் இருந்து, இதுவரை சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 14 Sep 2016, 10:32 pm
பெங்களூருவில் இருந்து, இதுவரை சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil so far nearly 1 5 lakh tamilians returned from bengaluru
பெங்களூருவில் இருந்து சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறினர்!


கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வாழும் தமிழர்கள் மீது கன்னட அமைப்புகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த இனவெறி தாக்குதல்களின் விளைவாக அங்கு வசித்து வந்த தமிழர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ஐடி ஊழியர்கள், பல்வேறு நிறுவனத் தொழிலாளர்கள், மாணவர்கள் என சுமார் 1.5 லட்சம் பேர் பெங்களூருவில் இருந்து வெளியேறி, தாய்த் தமிழகத்திற்கு வந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

மைசூரு, பெங்களூருவில் உள்ள மேலும் பல தமிழர்கள், தமிழ் பேசினாலே அடிப்பார்கள் என்பதால், வீட்டை விட்டே வெளிவராமல் முடங்கியுள்ளனர். கன்னட அமைப்புகளின் வன்முறை காரணமாக, கர்நாடகா மாநிலத்திற்கு, போக்குவரத்து, ஐ.டி., சுற்றுலா, வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும் ரூ.30,000 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி