ஆப்நகரம்

மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கப்பிரதட்சணம்- சமூக ஆர்வலர்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jul 2019, 6:08 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை மாநில அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அங்கப்பிரதட்சனம் மேற்கொள்ள போவதாக சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.
Samayam Tamil மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கப்பிரதட்சணம்- சமூக ஆர்வலர்!
மழை நீர் சேகரிப்பு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கப்பிரதட்சணம்- சமூக ஆர்வலர்!


தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.

நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டதால் அன்றாட தேவைக்கு கூட குடிநீர் இல்லாமல் சென்னைவாசிகள் திணறி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களும் பெரும்சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

இதனிடையே ஈரோடு மாவட்டம் வேட்டுவன் புதூரை சேர்ந்த சித்துராஜ் என்ற கூலி தொழிலாளி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் என்ன விஷயமாக ஆட்சியரை சந்திக்க வந்துள்ளீர்கள் என்று ஊழியர்கள் கேட்டனர். அப்போது அவர், மத்திய அரசு நாடு முழுவதும் நீராதாரத்தை சேமிக்கும் வகையில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்திடும் வகையில். தனது அன்றாட சேமிப்பில் இருந்து 5000 ரூபாயை நிதியை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் அரசு, நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அங்கப்பிரதட்சணம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளித்திடவும் கோரிக்கை விடுக்க வந்துள்ளதாக கூறினார்.

இதைக் கேட்ட அதிகாரிகள், திட்டம் குறித்து அரசு பணிமேற்கொள்ளும் போது தங்களது 5000 ரூபாயை பெற்று கொள்வதாக கூறி அவரது சேமிப்பு தொகையை திரும்ப அளித்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்துராஜ்; மழைவளம் இல்லாமல் விளைநிலங்கள் பாழானது மட்டுமில்லாது, போதிய நீரின்றி வறட்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இந்நிலையை போக்கும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை மாநில அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், மக்களிடையே கிடைக்கின்ற தண்ணீரை அவர்களது பயன்பாட்டின் போது சிக்கனமாக பயன்படுத்தி மிதமுள்ள தண்ணீரை பாதுகாக்கும் பொருட்டும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் மக்களாலும் அரசாலும் செயல்படுத்திட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அங்கப்பிரதட்சனம் முலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி