ஆப்நகரம்

காவலர்களுக்கு ஆதரவாக பேசிய ரஜினிக்கு பதிலடி தந்த பாலபாரதி!

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ரஜினியை, மார்க்சிஸ்ட் கம்னியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 2:25 am
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ரஜினியை, மார்க்சிஸ்ட் கம்னியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil காவலர்களுக்கு ஆதரவாக பேசிய ரஜினிக்கு பதிலடி தந்த பாலபாரதி!
காவலர்களுக்கு ஆதரவாக பேசிய ரஜினிக்கு பதிலடி தந்த பாலபாரதி!


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சில போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராடத்தில், போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களும் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,” வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்னியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், சமூக ஆர்வலருமான பாலபாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “400 விவசாயிகள் காவிரி மண்ணில் மரணமடைந்தார்களே அப்போது சிறிதாவது கவலைப்பட்டீர்களா? நீங்கள் ஏதோ பிரதம மந்திரி என்பது போல் காவல்துறைக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்..அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னே ஏதேச்சதிகாரமா? நீங்கள் யார் சார் உத்தரவுப்போட?” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த செய்தி