ஆப்நகரம்

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய ராதாரவிக்கு கடும் கண்டனம்!!

திமுக மேடையில் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களை மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசுவதாக நினைத்துக் கொண்டு மாற்றுத் திறனாளிகளை இழிபடுத்திய நடிகர் ராதா ரவிக்கு பல தரப்பிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

TOI Contributor 4 Mar 2017, 2:26 pm
திமுக மேடையில் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களை மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசுவதாக நினைத்துக் கொண்டு மாற்றுத் திறனாளிகளை இழிபடுத்திய நடிகர் ராதா ரவிக்கு பல தரப்பிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil social medias condemned radharavis criticism against handicapped people
மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய ராதாரவிக்கு கடும் கண்டனம்!!


திமுக மேடையில் வைகோவையும், ராமதாசையும் தாக்கி பேசுவதாக நினைத்துக் கொண்டு மாற்றுத் திறனாளி குழந்தை மற்றும் அவரது தாயை ராதா ரவி பழித்துப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும்போது இவரது பேச்சை அங்கிருந்த கட்சி தொண்டர்களும் கைதட்டி ரசித்தது, மிகவும் அறுவெறுக்கத்தக்கதாக இருந்தது என்று தற்போது கண்டனக் குரல் எழுந்துள்ளது.

அரசியல் தலைவர்களை விமர்சித்துப் பேச எத்தனையோ உதாரணங்கள் இருக்க, மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசி சம்பவத்தை திமுக தலைமை கண்டிக்க வேண்டும், இதுபோன்று மேடைகளில் பேசக் கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தபோதும் ராதாரவி வருத்தம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. திமுக தலைமையாவது அவரிடம் இப்படியெல்லாம் பேச வேண்டாம் என்று அறிவுரை சொன்னதா என்ற தகவலும் வெளியாகவில்லை. ராதாரவியின் பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


இன்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள்மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் (TARATDAC) ராதாரவி வீடு முன்பு நடத்தவிருக்கிற முற்றுகைப் போராட்டம் அவரை வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வைப்பதோடு, இனி எவருமே பொதுவெளியில் இப்படி அநாகரிகமாக பேசுவதற்கு பயப்பட வேண்டும்.

Social media's condemned Radharavi's criticism against Handicapped people

அடுத்த செய்தி