ஆப்நகரம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் சில தகவல்கள்!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.

TNN 17 Feb 2017, 3:59 am
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil some details about bengaluru parappana agrahara jail
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் சில தகவல்கள்!!!


பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்த சிறையில் சில தகவல்கள்

கடந்த 1997ம் ஆண்டு பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறை நிறுவப்பட்டது. 2000ம் ஆண்டு இந்த சிறைக்கு மத்திய சிறை என்று பெயர் சூட்டப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய சிறை இந்த பரப்பன அக்ரஹாரா சிறை. இந்த சிறையில் தான் அதிக கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த சிறையில் 2200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த சிறையில் கிட்டத்தட்ட 4400க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக அனைத்து சிறைச்சாலையிலும் இருப்பது போன்ற சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருப்பதுடன், முள் கம்பி வேலியும் போடப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பிரபலமானவர்கள் உள்பட பலர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக தலைவருமான எடியூரப்பா, ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்யா செட்டி ஆகிய பிரபலங்கள் இந்த சிறையில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் இந்த சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி