ஆப்நகரம்

சசிகலா பேனர் மீது சாணி அடிப்பு : சுத்தம் செய்த போலீசார்

அதிமுகவினர் வைத்த சசிகலா பேனர் மீது மர்ம நபர்கள் அடித்த சாணியை போலீசார் சுத்தப்படுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Jan 2017, 2:43 pm
மயிலாடு துறை : அதிமுகவினர் வைத்த சசிகலா பேனர் மீது மர்ம நபர்கள் அடித்த சாணியை போலீசார் சுத்தப்படுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil some one through the cow dumb in sasikala banner police cleaning
சசிகலா பேனர் மீது சாணி அடிப்பு : சுத்தம் செய்த போலீசார்



ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் வரவேற்ப்பையும் , பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏதிர்ப்பையும் கிளப்பியுள்ளது


இந்தநிலையில் மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது.

சசிகலாவின் மீது அடிக்கப்பட்ட சாணியை போலீசார் ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி