ஆப்நகரம்

''எங்களுக்காக வாங்க ரஜினி'' வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்..!

வேலூரில் பரவலாக ரஜினியை அரசியலுக்கு வரக்கோரி அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்

Samayam Tamil 12 Nov 2020, 8:55 pm
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் என்றாலும், சுருக்கமாக சொன்னால் இன்னும் 5 மாதங்கள்தான் உள்ளன. இந்நிலையில், தேர்தலை குறித்து எந்த கருத்தையும் கூறாமல் இருக்கும் ரஜினியை அவரது ஆதரவாளர்கள் கட்சியை அறிவிக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
Samayam Tamil ரஜினி


ஆனால், உடல்நிலை மற்றும் கட்சி தொடங்காத சூழல் ஆகிய காரணங்களால் வரும் தேர்தலுக்குள் ரஜினி கட்சியை அறிவிப்பதும், தேர்தலில் நிற்பதும் சாத்தியமிருந்தும், சாத்தியப்படாத நிலைதான் உள்ளது. அதே சமயம், அவருடைய நெருங்கிய நண்பர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் அதன் மூலம் கமலுக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கையை வைத்து ரஜினியின் பலத்தை ஒப்பிட வாய்ப்பாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, காட்பாடி ஆகிய பகுதிகளில் ரஜினியின் ஆதரவாளர்கள் தங்களது வீடுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். அந்த ஸ்டிக்கரில், '' உங்களுக்காக கடவுள் கிட்ட நாங்க வேண்டிக்கிறோம். எங்களுக்கு நல்லாட்சித்தர நீங்க வாங்க ரஜினி, எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே'' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரே நாளில் ரூ. ஒரு கோடியே 9 லட்சத்திற்குத் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது...

அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல், கடைசியில் நிலைமை சரியில்லை என்று கூறிவிட்டு சென்ற ரஜினியை அவரது ஆதரவாளர்கள் திரைப்படத்தில் வர க்ளைமேக்ஸ் போல மீண்டும் அவரது வருகைக்காக காத்திருக்கின்றனர். சென்டிமென்டில் கவிழ்ந்துவிடும் ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல என்றாலும், உண்மையில் ரஜினி இதைத்தான் எதிர்பார்க்கிறாரா..? அவர் இப்படியே இருந்தால் விரைவில் அவரது ஆதரவாளர்கள் பெருங்கூட்டமாக ராகவேந்திரா இல்லத்தை நோக்கி படையெடுத்தாலும் ஆச்சரியமில்லை.

அடுத்த செய்தி