ஆப்நகரம்

மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சாமானிய மக்களை தூண்டிவிட்டு சிலர் வேடிக்கைப் பார்ப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Nov 2018, 12:21 pm
சாமானிய மக்களை தூண்டிவிட்டு சிலர் வேடிக்கைப் பார்ப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
Samayam Tamil rb udhaya kumar


சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 'கஜா புயல் காரணமாக மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதுகாப்பு வளையத்திற்குள் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு சிலர் தேவையில்லாமல் வதந்திகளை பரப்புகிறார்கள். மீட்பு பணி நடவடிக்கைகள் எதுவும் நடக்காதது போல் அவர்கள் பேசுகிறார்கள்.

எங்கள் மீது பலி சுமத்துவதாக நினைத்துக் கொண்டு, களத்தில் பணியாற்றுகின்ற பலரது தியாக உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்கள். இது களத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். உண்மை நிலவரம் தெரியாமல் சாமானிய மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். கஜா புயல் என்பது பேரிடர். பேரிடர் வரவே கூடாது என்பது தான் மக்களின் எண்ணம். ஆனால், இந்த இயற்கை சீற்றத்தை தடுக்கவே முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், நாம் அதை எதிர்கொள்கிறோம். இந்த நேரத்தில் வதந்திகளை கிளப்புவது தேவையில்லாத ஒன்று. நீங்கள் பொன், பொருள் எதுவும் தர வேண்டாம். அமைதியாக இருந்தாலே, தமிழகத்தை சகஜ நிலைக்கு தமிழக அரசு கொண்டு வந்துவிடும்'.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி