சென்னை : என்னை பற்றி சிலர் தேவையில்லாத அவதூறு பரப்புகின்றனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தமிழக முதல்வராக பன்னீர் செல்வமும், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றார்கள். சசிகலாவுக்கு அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியில் மட்டுமே ஆதரவு நிலவி வருகிறது.
ஆனால் அதிமுக அடிமட்ட தொண்டர் மற்றும் மக்களின் ஆதரவு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கே உள்ளது. தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழங்கமெங்கும் சுவரொட்டிகள் பேனர்கள் ஓட்டப்பட்டுள்ளனர். மேலும் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் அவரது வீடு முன்னால் வந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
தனது ஆதரவாளர்களிடம் தீபா பேசும்போது , " நான் ஏன் பொட்டு வைக்கததால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள் என்று செய்தி பரப்புகின்றனர். நான் அனைத்து மதத்திற்கு மதிப்பளிப்பவள். நான் என் அத்தை போறே மத சார்பற்றவர். அனைத்தது மத்தினரும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனது அத்தையில் சாவில் உள்ள மர்ம விலக வேண்டும் என்று நான் கூறிய போதே என்மீது தேவையற்ற வதந்திகளை பரப்பினார்கள். என்னை பார்க்க வரும் தொண்டகளை சிலர் மிரட்டுகின்றனர். அவர்களுடைய மிரட்டலுக்கு யாரும் அஞ்ச வேண்டாம். நான் அரசியல் ரீதியாக பலன் பெற்றுவிடக்கூடாது என்று சிலர் இவ்வாறு செய்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தமிழக முதல்வராக பன்னீர் செல்வமும், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றார்கள். சசிகலாவுக்கு அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியில் மட்டுமே ஆதரவு நிலவி வருகிறது.
ஆனால் அதிமுக அடிமட்ட தொண்டர் மற்றும் மக்களின் ஆதரவு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கே உள்ளது. தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழங்கமெங்கும் சுவரொட்டிகள் பேனர்கள் ஓட்டப்பட்டுள்ளனர். மேலும் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் அவரது வீடு முன்னால் வந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
தனது ஆதரவாளர்களிடம் தீபா பேசும்போது , " நான் ஏன் பொட்டு வைக்கததால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள் என்று செய்தி பரப்புகின்றனர். நான் அனைத்து மதத்திற்கு மதிப்பளிப்பவள். நான் என் அத்தை போறே மத சார்பற்றவர். அனைத்தது மத்தினரும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனது அத்தையில் சாவில் உள்ள மர்ம விலக வேண்டும் என்று நான் கூறிய போதே என்மீது தேவையற்ற வதந்திகளை பரப்பினார்கள். என்னை பார்க்க வரும் தொண்டகளை சிலர் மிரட்டுகின்றனர். அவர்களுடைய மிரட்டலுக்கு யாரும் அஞ்ச வேண்டாம். நான் அரசியல் ரீதியாக பலன் பெற்றுவிடக்கூடாது என்று சிலர் இவ்வாறு செய்கிறார்கள்" என்று அவர் கூறினார்.