ஆப்நகரம்

கோடை விடுமுறை ரத்து? பள்ளிகளுக்கு கிளம்பும் மாணவ, மாணவிகள்... பகீர் தகவல்!

கோடைவிடுமுறையிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 11 May 2023, 4:46 pm
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்த வருடமும் புகார்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil private school students


ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று எச்சரித்தபடி சுற்றறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனாலும், சில தனியார் பள்ளிகள் நம்பர் 1 ரிசல்ட் பெறுவதற்காக கோடை விடுமுறை நாட்களிலும் மாணவ, மாணவிகளை புத்தகம் சுமக்க வைக்கின்றன.

இவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிகளை கண்காணிக்கவும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், ராசிபுரம், பரமத்திவேலுார் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

ஆண்டு முழுவதும் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு முடிந்ததும் கிடைக்கும் விடுமுறை முக்கியம் வாய்ந்தது. குறிப்பாக கோடைகாலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை வழங்கி வருகிறது.

அதனை பொருட்படுத்தாமல் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளை காலை 7 மணிக்கே வரவழைத்து சிறப்பு வகுப்புகள் எடுப்பதால் பிள்ளைகளுக்கு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். எனவே, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இதனை மிக தீவிரமாக கண்காணித்து சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி எடுத்தால் மட்டுமே மற்ற பள்ளிகளுக்கு பாடமாக இருக்கும் என்றும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி