ஆப்நகரம்

பயணிகளுக்கு ஷாக் நியூஸ்: ஜனவரி 31 வரை இந்த ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 25 Jan 2022, 10:31 am
கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவையும் பல மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு மக்கள் நடந்தே சென்ற கொடுமையும் அரங்கேறியது.
Samayam Tamil southern railway


பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் வழக்கம் போல் ரயில்கள் இயங்கத் தொடங்கின. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்த சூழலில் கொரோனா மூன்றாவது அலை சுழன்றடித்து வருகிறது. ஆனாலும் இந்த அலையின் போது ரயில் சேவைகள் பெரியளவில் குறைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பேருந்துகள் ஒடாத நிலையிலும் மக்கள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர். இந்த சூழலில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி,
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ? அமைச்சர் சொன்ன தகவல்!
*இன்று முதல் திருப்பதி-காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சேவை திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும்.

*மறு மார்க்கமாக காட்பாடி-திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் 07662, காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் இன்று முதல் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

*அதே போல் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் வண்டி எண் 17238, சென்ட்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்பட உள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள்: பூச்சி முருகன் கொடுத்த வாக்குறுதி!
*பித்திரகுண்டா-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வண்டி எண்17237, பித்திரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில்சேவையும் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி