ஆப்நகரம்

உதவாத பெற்றோரை வெட்டிக் கொன்ற மகன்!!

சிவகங்கை மாவட்டத்தில் சொத்துக்காக தனது பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

TOI Contributor 5 Jan 2017, 1:12 pm
சிவகங்கை மாவட்டத்தில் சொத்துக்காக தனது பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil son has murdered father and mother for money in tamil nadu
உதவாத பெற்றோரை வெட்டிக் கொன்ற மகன்!!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். மாநில அரசு வேலையில் இருந்த இவருக்கு மனைவி சுசீலா, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகாலிங்கமும், மனைவி சுசீலாவுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது கழுத்து அறுபட்ட நிலையில் மகாலிங்கமும், அவரது மனைவியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பிரேதங்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் மகாலிங்கத்தின் மகன் சந்தானத்திடம் விசாரித்தனர்.

அப்போது தனது பெற்றோரை கொன்றது தான்தான் என்றும், ''சொத்து மற்றும் தனக்கு பொருளாதார ரீதியில் தந்தை உதவவில்லை என்றும், உதவி கேட்டு சென்றபோது, குடும்பத்தை காப்பாற்ற முடியாவிட்டால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்'' என்று தந்தை கூறியதால் அவரையும், தாயையும் வெட்டிக் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி