ஆப்நகரம்

மகன் காதல் திருமணம் செய்ததால் ஆசிரியை தற்கொலை!

சென்னையில் என்ஜினீயராக வேலைசெய்யும் மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால், ஓய்வுபெற்ற ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

TNN & Agencies 17 May 2017, 11:15 am
சென்னையில் என்ஜினீயராக வேலைசெய்யும் மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால், ஓய்வுபெற்ற ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Samayam Tamil son makes love marriage mother suicdes in anger
மகன் காதல் திருமணம் செய்ததால் ஆசிரியை தற்கொலை!


தேனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயபாரதி (55 வயது). ஆசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரின் மகன் மனோஜ் (28) என்ஜினீயரிங் முடித்துவிட்டு, சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அவர், தனது உறவினரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதற்கு ஜெயபாரதி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் தனது தாயின் எதிர்ப்பை மீறி, கடந்த 12ம் தேதி மனோஜ் காதலித்த பெண்ணை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பின் தனது தாயை சமாதானம் செய்ய நேற்று காலை தேனிக்கு வந்தார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

வீட்டின் கதவை மனோஜ் தட்டியும் திறக்கவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தேனி போலீசாருக்கு மனோஜ் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயபாரதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மகன் காதல் திருமணம் செய்த நாளில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி