ஆப்நகரம்

நிரந்திர பொதுசெயலாளருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் : ஓபி.எஸ்.,!

அ.தி.மு.க., வின் நிரந்திர பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

TOI Contributor 8 Feb 2017, 1:11 pm
சென்னை: அ.தி.மு.க., வின் நிரந்திர பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
Samayam Tamil soon aiadmks party head election will be held
நிரந்திர பொதுசெயலாளருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் : ஓபி.எஸ்.,!


சசிகலா முதல்வராவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம், நேற்று இரவு பல உண்மைகளையும் தனக்கு ஏற்பட்ட அவமதிப்புகளையும் அதிரடி அறிவிப்பாக அறிவித்தார்.

இதையடுத்து இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பன்னீர் செல்வம்,’ சசிகலா தற்போது தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே உள்ளார். பெரும்பான்மையை மக்களிடம் நிரூபிப்பேன்.
குற்றச்சாட்டுகளுக்கு காலம் உரிய பதில் அளிக்கும். தவிர, நிரந்திர பொதுச்செயலர் பொறுப்புக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி