ஆப்நகரம்

தமிழக பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

Samayam Tamil 13 Jan 2021, 5:11 pm
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர், வருகிற 19ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம். வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி: கல்வி அமைச்சர் புதிய தகவல்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் அல்லது பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம் என தெரிவித்துள்ள அரசு, மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி