ஆப்நகரம்

நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..! பண்ணை வீட்டில் விஜய் கூறியது என்ன?

சென்னை பண்ணை வீட்டில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நடிகர் விஜய் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Oct 2020, 4:12 pm
நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளுடன் அரசியல் வருகையை குறித்து ஆலோசித்தரா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
Samayam Tamil source about what actor vijay consulted with district council executives
நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..! பண்ணை வீட்டில் விஜய் கூறியது என்ன?


​சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக - திமுக என இரு மாபெரும் திராவிட கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் வெளிப்படுத்தி வருவதும், கூட்டணி கட்சிகள் தங்களது பலத்தை காட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் களத்தில் காலூன்றுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

​எஸ்.ஏ. சந்திரசேகர் சரவெடிகள்

அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் எடுக்கும் முடிவுகள் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தூண்டுதலே காரணம் என்ற விமர்சனங்கள் நெடு நாட்களாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தவர், '' “பாஜகவில் இணையப் போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். நடிகர்களின் சுதந்திரத்தை தடுக்க முடியாது. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்துகிறேன்” என தெரிவித்தார். ஆனால் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து எவ்வித நேரடி அறிவிப்புகளையும் இதுவரை வெளியிட்டதில்லை. அனைத்தும் கருத்தாகவே வெளிப்பட்டன.

​பரபரப்பு போஸ்டர்கள்

இந்த நிலையில், சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் நடிகர் விஜய் குறித்து ஒட்டப்படும் போஸ்டர்கள் அவருக்கு தலைவலியை உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் திருச்சியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரில், '' “2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை கண்ட தமிழகம். தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே! நாளைய தமிழக முதல்வரே! 2021ல் உங்கள் தலைமையில் ஆட்சி அமையட்டும். தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

​மன்ற நிர்வாகிகள் சந்திப்பு

இந்த போஸ்டர் விவகாரத்தை தொடர்ந்து சென்னை ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து தனது இயக்க மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்துள்ள நிகழ்வு அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ள விஜய் அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசித்தாரா என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.

​தகவல் சொல்லுவது

ஆனால், அப்படியெல்லாம் எதுவுமில்லை, தன்னை தொடர்புபடுத்தி அரசியல் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியதாகவும், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் உதவிகளை செய்யவும், உறுப்பினர்களை அதிகப்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி