ஆப்நகரம்

அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு..!

திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 8:39 pm
உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 1392 கொடையாளர்களிடம் இருந்து (donors) 1245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் கடந்த மார்ச் முதல் 27 கொடையாளர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
Samayam Tamil vijayabaskar minister


இதற்காக தமிழக சுகாதரத்துறையை கவுரவிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொளி வாயிலாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கினார். அந்த காணொளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அவர் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 8 .45 க்கு புறப்பட வேண்டும். ஆனால், திடீரென அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், உடனடியாக அங்கிருந்து புதுக்கோட்டை சென்றவர், விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயன்றதை செய்வோம், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

காலை 8 .45க்கு புறப்படவேண்டிய இண்டிகோ விமானத்தின் விமானிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாலேயே அந்த விமானம் ரத்தானது என்றும் உடனடியான அந்த விமானி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விமானம் புறப்படுவதற்கு முன்னரே விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் முன்கூட்டியே அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த அமைச்சர் உள்ளிட்ட 42 பயணிகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி