ஆப்நகரம்

ஸ்டாலின் கொடுத்த கடைசி வாய்ப்பு... நழுவி செல்லும் கூட்டுறவுத்துறை?

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2022, 11:01 am
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மார்ச் 27 ஆம் தேதி முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து போக்குவரத்துக்கு துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக அதிகார குறைப்பு செய்யப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து துறையின் சென்னை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி விஜிலென்ஸ் ரெய்டு நடந்து அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிலும் அமைச்சர் பெயர் அடிபட்டது.
Samayam Tamil i periyasamy


மேலும், சாதி ஆணவ நடவடிக்கை, லஞ்ச குற்றசாட்டுகள் என ராஜகண்ணப்பன் மீது அடிமேல் அடி விழுந்து வந்தது. இந்நிலையில் அரசு அதிகாரியை சாதி பெயரை திட்டிய விவகாரத்தில் அவரை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக போக்குவரத்து துறையில் இருந்து நீக்கினார். ஆனால், இந்த முடிவை முதல்வர் துபாயில் இருந்தபோதே எடுத்துவிட்டதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை மார்ச் 27 ஆம் தேதி ராஜாக்கண்ணப்பன் திட்டியிருந்தாலும் அடுத்த நாள்தான் மீடியாவில் கசிந்தது.

ஆனால், துபாயில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் 27 ஆம் தேதியே விஷயம் சென்று விட்டதாம். அப்போதே, குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, ராஜகண்ணப்பனின் பதவியை பறித்துவிடுங்கள் என்றுதான் கூறியிருக்கின்றனர். ஆனால், முதல்வர் அதற்கு மறுத்துள்ளார். மேலும், பதவியை எக்சேஞ் செய்யலாம் என்று யோசித்த முதல்வருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் ஞாபகம் வந்துள்ளது. காரணம், அமைச்சர் பெரியசாமி திமுகவில் சீனியர் அமைச்சர்களில் ஒருவர். தொடக்கத்தில் இருந்தே கூட்டுறவுத்துறை மேல் அவருக்கு விருப்பம் இல்லை. அமைச்சரவையில் பெரிய துறை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வந்த அவருக்கு ராஜகண்ணப்பனின் போக்குவரத்து துறையாவது கிடைக்கும் என எதிர்பார்த்ததாக தகவல்.

முதல்வருக்கும் அதில் ஆர்வம் இருந்தாலும், ராஜகண்ணப்பனுக்கு கூட்டுறவுத்துறை சென்றுவிட்டால் இன்னும் சிக்கல் தான் என தெரிந்துகொண்ட முதல்வர் சிவசங்கர் வசம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பனுக்கு மாற்றியும், போக்குவரத்து துறையை சிவசங்கருக்கு மாற்றியும் ஆளுநருக்கு அறிவித்து விட்டார். எனினும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாக உள்ளது. ஆனால், கட்சிக்குள் ஒட்டியும், ஒட்டாமலும் விரும்பாத துறையுடன் ஐ. பெரியசாமி காலத்தை ஓட்டி வருவதாகவும், சீக்கிரம் பெரிய துறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருப்பதாகவும் அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி