ஆப்நகரம்

சென்னையில் இறங்கிய தேனி இளைஞர்கள்... ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்? பரபரப்பாகுமா சென்னை?

சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்த ஓபிஎஸ் தரப்பு மாஸ்டர் பிளான்

Samayam Tamil 21 Jun 2022, 3:32 pm
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி தங்களின் யார் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி பக்கம் ஆதரவு அலை அடித்து வரும் சூழலில் தலைமை பொறுப்பை ஒற்றை சார்பில் விட்டுக்கொடுக்க முடியாது என்ற முனைப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்.
Samayam Tamil ops


இந்த பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முடிவு செய்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பலத்தை காட்டவே பொதுக்குழு கூட்டப்படுவதாக ஓபிஎஸ் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஈபிஎஸ்க்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூடுவதால் அங்கு சலசலப்பை ஏற்படுத்த ஓபிஎஸ் தரப்பில் இருந்து 250 வாலிபர்கள் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் இருந்து 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது, பணம் கொடுப்பதாக ஏற்பாடு செய்து அவர்களை 8 பேருந்து மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் வரும் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி