ஆப்நகரம்

முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுப்பேத்திய அமைச்சர் - ஷாக்கான திமுக!

அமைச்சர் ராமச்சந்திரன் சமீபத்திய பேச்சு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 21 May 2022, 3:30 pm
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் சமீபத்திய பேச்சு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil sources said tamil nadu chief minister mk stalin upset with minister kkssr ramachandran latest speech
முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுப்பேத்திய அமைச்சர் - ஷாக்கான திமுக!


தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் செய்த சாதனை குறித்து மாவட்டங்கள் தோறும் திமுக சார்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், திமுக அரசின் ஓராண்டு சாதனை பற்றிய விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வராக, திமுகவில், கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது போல் அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள். திமுகவை எதிர்த்து சண்டையிட ஆள் இல்லை. முதலில் அதிமுக ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கட்டும்.
சமூக விரோதிகளின் புகலிடமாக தமிழகம் - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. அவர்கள் கஜானாவை சுரண்டி விட்டனர். தற்போது திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. நமது முதல்வர் நல்லவர். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி டெல்லிக்கு பயப்படாது. டெல்லிக்கு பயப்படாத தலைமை தான் தமிழகத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதியை முன்னிலைப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்டாலினுக்கு அடுத்து, உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் பேசி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி