ஆப்நகரம்

டெல்லி பறந்த அண்ணாமலை - மோடி, அமித் ஷாவுக்கு சீக்ரெட் ரிப்போர்ட்?

பாஜக தலைவர் கே.அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்

Authored byVelayuthan Murali | Samayam Tamil 30 Nov 2022, 2:35 pm
டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Annamalai
அண்ணாமலை


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை, தலைநகர் டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டு உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக புகார் அளித்த நிலையில், இன்று டெல்லி விரைந்து உள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை டெல்லி சென்றார். அதே விமானத்தில், என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு இயக்குனர் திங்கர் குப்தாவும் இருந்தார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஏதாவது பேசிக் கொண்டனரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது, கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு, தமிழக சட்டம் - ஒழுங்கு, திமுக அமைச்சர்கள் ஊழல்கள் குறித்த விவரங்களை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000?
இந்த விவகாரங்கள் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது கவனத்திற்கு எடுத்துச் செல்ல, அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், திமுக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த அவசர டெல்லி பயணம், தமிழக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி