ஆப்நகரம்

என்ட்ரிக்கு காத்திருக்கும் சசிகலா - ஜெயக்குமார் மூலம் எடப்பாடிக்கு செக்!

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு, வி.கே.சசிகலா செக் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 29 May 2022, 10:42 am
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு, வி.கே.சசிகலா செக் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil EPS + Sasikala


அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை நீண்ட இழுபறிக்கு பிறகு அண்மையில் அதிமுக வெளியிட்டது. அதில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க சசிகலா கட்சிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

முதலில் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, வளர்மதி, இன்பதுரை, ராஜ் சத்யன் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டன. இதில் ஜெயக்குமாருக்கு கட்டாயம் வாய்ப்பு வழங்கப்படும் என பேசப்பட்டது. காரணம் அவர் தான் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. ஜெயக்குமார் சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்ததால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்து விட்டதாக அவருக்கு எதிராக சில அதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பி உள்ளனர்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்க எதிர்ப்பது ஏன்? நாராயணன் திருப்பதி பதில்!
இதனால் அவைத் தலைவர் பதவி காலியாக இருப்பதால் ஜெயக்குமாருக்கு அந்த பொறுப்பை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. சசிகலாவுக்கு எதிராக பேசி வந்த ஜெயக்குமார் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பு பறிபோனதால் அதிருப்தியில் உள்ளாராம்.
இப்படி கட்சிக்குள் பெரிய பூகம்பமே உருவாகி வருவதை அறிந்து கொண்ட சசிகலா, ஸ்மார்ட் மூவ் செய்யத் தொடங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், அதிமுக எனது தலைமையின் கீழ் வருவது 100 சதவீதம் உறுதி என கூறியுள்ளார்.

ஜெயக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி கட்சிக்குள் நுழைய சசிகலா தீவிரம் காட்டி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பயங்கர எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஜெயக்குமார் மூலமே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்த சசிகலா திட்டமிட்டு வருவது, ரத்தத்தின் ரத்தங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அடுத்த செய்தி