தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 31 ஆம் தேதி வரை, வார நாட்களில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு மாதத்தின் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில், அதாவது, 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தலைநகர் சென்னை உட்பட சில மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது, 30 ஆம் தேதி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையும் பட்சத்தில், வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 31 ஆம் தேதி வரை, வார நாட்களில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தலைநகர் சென்னை உட்பட சில மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது, 30 ஆம் தேதி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையும் பட்சத்தில், வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.