ஆப்நகரம்

தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 3 Jan 2017, 1:54 am
சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil south coastal districts of tamilnadu will get rain says imd
தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


மாலத்தீவு அருகே காற்றழுத்த நிலை நிலவி வந்தது. பின்னர் அது மெல்ல வலுவிழந்து விட்டது. இதையடுத்து தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை. வடகிழக்கு பருவக் காற்று காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் கடலோர பகுதிகளில் ஓரிரு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

South Coastal Districts of Tamilnadu will get rain says IMD.

அடுத்த செய்தி