ஆப்நகரம்

தஞ்சாவூர் கோழிக்கறி... கருவேப்பிலை மீன் வறுவல்...தமிழ்நாட்டு அசைவ உணவுகளை ஒரு கை பார்த்த சீன அதிபர் !!

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சார்பில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு , ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிரபலமான பல்வேறு அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டு அசத்தப்பட்டது.

Samayam Tamil 12 Oct 2019, 8:03 am
சீன அதிபர் ஷி ஜிங்பிங், இரண்டு நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை மதியம் சென்னை வந்தடைந்தார். இங்கிருந்து மாலை 5 மணியளவில் மாமல்லபுரம் சென்ற அவரை, அங்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வரவேற்றார்.
Samayam Tamil WhatsApp Image 2019-10-11 at 22.15.54 (1).


இருநாட்டு தலைவர்களும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிறப்புமிக்க சிற்பங்களை கண்டுகளித்தனர். அதையடுத்து, கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் இருவரும் கண்டுகளித்தனர்.

பின்னர் அங்கே, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கும் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா -சீனா இடையேயான வர்த்தகம் , கலாசசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமான அசைவ உணவுகள் ஷி ஜிங்பிங்கிற்கு பரிமாறப்பட்டன. மீன், சிக்கன், மட்டன் என பல்வேறு உணவு வகைகளை அவர் ரசித்து, ருசித்து உண்டார். அவருக்கு எதிரே அமர்ந்து பிரதமர் மோடியும் இரவு விருந்து அருந்தினார்.

சீன அதிபரின் இரவு விருந்தில் இடம்பெற்ற அசைவ உணவு அயிட்டங்கள் : தஞ்சாவூர் கோழிக்கறி, கருவேப்பிலை மீன் வறுவல், மட்டன் குருமா, அரைச்சுவிட்ட சாம்பார், சுண்டைக்காய் புளிக்குழம்பு, தக்காளி ரசம் உள்ளிட்ட தமிழகத்தில் பிரபலமான அசைவ உணவு வகைகள் ஷி ஜிங்பிங்கிற்கு பரிமாறப்பட்டன.

இவற்றுடன், ஆந்திர மாநில சிறப்பு அசைவ உணவு வகையான மம்சம் பிரியாணி, கேரளா ஸ்பெஷலான தேங்காய் பால் கலந்து சமைக்கப்பட்ட மட்டன் வகை உள்ளிட்டவையும் விருந்தில் இடம்பெற்றிருந்தன.

அடுத்த செய்தி