ஆப்நகரம்

3 மணி நேரத்தில் 500 தடவை மின்னல்; பீதியடைந்த மக்கள்

நெல்லையில் நேற்று இரவு மழை பெய்த மூன்று மணி நேரத்தில் 500 தடவை கண்கள் கூசும் மின்னல் வெட்டியதால், மக்கள் பீதியில் உறைந்தனர்.

Samayam Tamil 14 Mar 2018, 6:26 pm
நெல்லையில் நேற்று இரவு மழை பெய்த மூன்று மணி நேரத்தில் 500 தடவை கண்கள் கூசும் மின்னல் வெட்டியதால், மக்கள் பீதியில் உறைந்தனர்.
Samayam Tamil south tamilnadu thunder storm with heavy lightening
3 மணி நேரத்தில் 500 தடவை மின்னல்; பீதியடைந்த மக்கள்


மன்னார் வளைகுடா பகுதியில் மையம் கொண்டிருந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், குமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.

தென்மேற்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமாி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுத்தோ்வு நடைபெறாத பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது லட்சத்தீவுக்கு அருகே 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதால், தென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

நேற்று இரவு 3 மணி நேரம் பெய்த கனமழையின் போது, சுமார் 500 தடவை கண்களை பறிக்கும் மின்னல் வெட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 190 மி.மீ. மழையும், தூத்துக்குடியில் 200 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி