ஆப்நகரம்

தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை:சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

TNN 2 Nov 2017, 1:22 pm
தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil south tamilnadu will have heavy rainfall for the next two days
தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை:சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இலங்கை அருகே மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.

தென்தமிழத்தில் அநேக இடங்களில் கனமழை இருக்கும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை இருக்கும். சென்னையைப் பொறுத்த வரையில், ஒரு சில முறை மட்டும் லேசான மழை இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்த வரையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

South Tamilnadu will have heavy rainfall for the next two days.

அடுத்த செய்தி