ஆப்நகரம்

வாரி வழங்கிய தென்மேற்கு பருவமழை; வீணாவதை தடுத்து சேமிப்பீரா?

தென்மேற்கு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 9 Sep 2017, 3:18 pm
சென்னை: தென்மேற்கு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil south west monsoon gives more than normal rainfall
வாரி வழங்கிய தென்மேற்கு பருவமழை; வீணாவதை தடுத்து சேமிப்பீரா?


தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழையின் அளவு, வழக்கத்தை விட கூடுதலான அளவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வளி மண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் கனமழை பதிவாகியுள்ளது.

கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழையும், பாம்பனில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், திருப்பூர் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் தெற்கு பகுதியில் டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை 34 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 48 சதவீதம் அதிகம் என்று பாலச்சந்திரம் கூறினார்.

South west monsoon gives more than normal rainfall.

அடுத்த செய்தி