காவல்துறை அதிகாரிகள் ரயில்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் பயணிப்பது குறித்து தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழகத்தில் பல்வேறு ரயில்களில் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக தென்னக ரயில்வேக்கு புகார்கள் வந்துள்ளன. புறநகர் ரயில்களிலும் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் அவர்கள் டிக்கெட் எடுக்கமாமல் பயணிக்கிறார்கள் என்று ரயில்வேக்கு வந்த புகார்களில் கூறப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில்களில் முறையான டிக்கெட் இல்லாமல் பயணிப்பது தண்டனை மற்றும் அபராதத்திற்கு உரிய குற்றமாகும். பொதுமக்களுக்கே ரயில்களில் அதிக இடம் அளிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் பல்வேறு ரயில்களில் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக தென்னக ரயில்வேக்கு புகார்கள் வந்துள்ளன. புறநகர் ரயில்களிலும் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் அவர்கள் டிக்கெட் எடுக்கமாமல் பயணிக்கிறார்கள் என்று ரயில்வேக்கு வந்த புகார்களில் கூறப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில்களில் முறையான டிக்கெட் இல்லாமல் பயணிப்பது தண்டனை மற்றும் அபராதத்திற்கு உரிய குற்றமாகும். பொதுமக்களுக்கே ரயில்களில் அதிக இடம் அளிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.