ஆப்நகரம்

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் எதிரொலி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

அரசு போக்குவரத்து தொழிலார்களி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TNN 14 May 2017, 5:30 pm
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலார்களி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Samayam Tamil southern railways announces special trains ahead of transport union strike
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் எதிரொலி: சிறப்பு ரயில்கள் இயக்கம்


போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை(15.5.2017) முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் தற்போது வேலைநிறுத்தம் துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Tamil Nadu: Southern Railway will run 3 special trains from tomorrow, in view of proposed strike by employees of State Transport Corporation — ANI (@ANI_news) May 14, 2017 பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாளை முதல் சென்னை எழும்பூர் - நெல்லை - சென்னை எழும்பூருக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் - கோவைக்கும், என்னை எழும்பூர்-திருவாரூர்-சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்றும், சிற்பபு கட்டண ரயிலுக்காக முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 8 மணிக்கும், சென்னையிலிருந்து கோவைக்கு இரவு 8.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையிலிருந்து நெல்லைக்கு தினமும் காலை 7.40 மணிக்கும், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 11.45 மணிக்கு திருவாரூரில் இருந்து சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி