ஆப்நகரம்

புரேவி புயலை எதிர்கொள்ள தயாராகிறதா தமிழகம்?

புரேவி புயல், பெருமழை ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தென் தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Samayam Tamil 2 Dec 2020, 8:23 am
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிசம்பர் 1) மாலை 5.30 மணியளவில் புயலாக மாறியுள்ளது. இதற்கு புரேவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil Burevi Cyclone


இந்த புயல் நேற்றைய நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கு திசையில் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது

இன்று (டிசம்பர் 2) மாலை அல்லது இரவில் புரேவி புயல் திரிகோணமலை கடற்கரைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் நாளை (டிசம்பர் 3) காலை மன்னார் வளைகுடாவிற்கு வரும். பின்னர் டிசம்பர் 4 அன்று அதிகாலையில் கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையை கடந்து தமிழகத்திற்குள் நுழைய இருக்கிறது.

புரேவி புயல்: எங்கெல்லாம் கன மழை பெய்யும் தெரியுமா?

இந்த நிலையில் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காகத் தமிழகத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

அரக்கோணம் பட்டாலியனிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் திருநெல்வேலிக்குச் சென்றுள்ளனர். குழுவுக்கு 20 பேர் வீதம் 3 குழுக்களில் உள்ள 60 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரண்டு பிரிவினர் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தூத்துக்குடி சென்றுள்ளனர்.

மீனவர்களுக்குப் பாதுகாப்பு உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1 - 4ஆம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தமிழகம் வரவிருந்த மத்தியக் குழுவின் பயணத் திட்டம் புரேவி புயலின் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வந்து நிவர், புரேவி ஆகிய இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி