ஆப்நகரம்

எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்... மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவி்த்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 9:38 pm
கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி,, சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இரு வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil spb


சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றமும், பின்னடைவும் மாறி, மாறி இருந்து வந்தன. இந்த நிலையில், உடல்நிலை மோசமடைவே கடந்த 13 ஆம் தேதி முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்ட்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

எஸ்பிபி-காக கூட்டு பிரார்த்தனை: சிவகார்த்திகேயன் உட்பட சினிமா நட்சத்திரங்கள் உருக்கமான பதிவு

முன்னதாக, தமது தந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, நம்பிக்கையை தளரவிடாமல் இருக்கிறோம் என்று எஸ்.பி.பி மகன் சரண் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எஸ்.பி.பி. நலம்பெற வேண்டி பாரதிராஜா, சிவகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி