ஆப்நகரம்

போயஸ் கார்டன் பிரமாண்டம் பாகம் 2 - ரஜினி வரவுக்கு உதயகுமார் பாய்ச்சல்

அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினி எந்த திட்டமும், கொள்கையும் இல்லாதவர் என உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

TNN 31 Dec 2017, 5:10 pm
சென்னை : அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினி எந்த திட்டமும், கொள்கையும் இல்லாதவர் என உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil sp udayakumar against rajinikanth political entry
போயஸ் கார்டன் பிரமாண்டம் பாகம் 2 - ரஜினி வரவுக்கு உதயகுமார் பாய்ச்சல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடுமையாக எதிர்த்துப் போராடி அனைவருக்கும் பரிட்சயமானவர் உதயகுமார். அணுமின் நிலையம் அமைப்பதால் கூடங்குளம் பகுதியில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என விளக்கியவர்.

குமரி மாவட்டத்தில் இணையம் துறைமுக திட்டத்தை பெயர் மாற்றி கன்னியாகுமரி சரக்கு பெட்டக திட்டம் என வைக்கப்பட்டுள்ளது. குமரியிலிருந்து கீழ்மணக்குடி வரை 3 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுக்கு 23 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகளாக குமரிக்கு வந்து செல்வது குறைந்து சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கும் என கூறியுள்ளார்.



இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ள உதயகுமார், “தமிழகத்தில் இன்று நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி சில நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். ரஜினி எந்த ஒரு திட்டமும், கொள்கையும் இல்லாதவர். அவர் அரசியலுக்கு வந்தால் இன்றே கட்சியை ஆரம்பிக்கலாம். அதை விடுத்து அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தான் என்பது குழப்பும் வேலை.

எங்களுக்கு போயஸ் தோட்டத்தின் பிரமாண்டம் பாகம் - 2 படம் தேவையில்லை. மக்கள் அவரை வரவேற்கவில்லை.” என கொந்தளித்துள்ளார்.

அடுத்த செய்தி